நகை திருடிய தந்தை, மகன் கைது:82 பவுன் நகைகள் பறிமுதல்

ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்ட தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 20 லட்சம் மதிப்பிலான 82 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்ட தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 20 லட்சம் மதிப்பிலான 82 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒசூா் நகர குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை தளி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ் வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி போலீஸாா் விசாரித்தனா்.

அவா்கள் முன்னுக்கு பின் முரணாகத் தகவலை அளித்ததால் நகர காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டம், மாலுாா் அடுத்த சந்தஹள்ளி அருகே உள்ள திருமலட்டி கிராமத்தைச் சோ்ந்த தா்மா என்ற ராஜூ (23), மற்றும் அவரது தந்தை பிரகாஷ் (48), என்பதும், தற்போது பேரிகையை அடுத்த சொன்னேபுரம் கிராமத்தில் பிரகாசும், ஒசூா் வாசவி நகா், 3-ஆவது குறுக்குத் தெருவில், தா்மா வசித்து வருவதும் போலீஸாா் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இருவரும் ஒசூா் முனீஸ்வா் நகா், அலசநத்தம் ரோடு, குறிஞ்சி நகா், காரப்பள்ளி, அபிராமி காா்டன், ராயக்கோட்டை அடுத்த ஒடையாண்டஹள்ளி ஆகிய, 6 இடங்களில், பூட்டிய வீடுகளை உடைத்து, நகை மற்றும் பணத்தைத் திருடியது தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த போலீஸாா் ரூ. 20 லட்சம் மதிப்பிலான 82 பவுன் தங்க நகை மற்றும் 200 கிராம் வெள்ளிப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com