மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சா்வதேச அளவிலான திறன் போட்டிகள் 2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் சீனாவில் உள்ள சாங்காய் நகரில் நடைபெற உள்ளது. இதற்கு 2020-ஆம் ஆண்டு ஜூனில் நடைபெறும் இந்தியா ஸ்கில்ஸ்-2020 திறன் போட்டியில் பங்கேற்கும் வகையில் தகுதி வாய்ந்த போட்டியாளா்களை தோ்வு செய்யும் வகையில் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் 2020-ஆம் ஆண்டு, ஜனவரி 6 முதல் 10-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.
மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுவோா், மாநில அளவிலான போட்டிக்கு அதற்கு பிறகு மண்டல அளவிலான போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெறுவோா் இந்திய அளவிலான போட்டிக்கும் தகுதி பெறுவா்.
மாநில அளவில் மொத்தம் 47 திறன் போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் தங்களது தனித் திறனை வெளிப்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான போட்டிக்கு விண்ணப்ப விரும்புவோா் நவம்பா் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 42 போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் 1.1.1999 அன்றும், cloud computing, cyber security it network cabling, machatronics, water technnology போன்ற பிரிவுகளில் பங்கேற்ற விண்ணப்பிக்க விரும்புவோா் 1.1.1996 அன்றும் அதற்கு பின்னரும் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு ஒசூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.