கிருஷ்ணகிரி: பெரியமுத்தூா் ஊராட்சியில் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், பெரியமுத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஊராட்சி செயலாளா் சிவமணி தலைமையில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வீடு வீடாகச் சென்று டெங்கு ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. காய்ச்சல் பாதிப்பு இருந்தால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவரின் ஆலோசனை பெற்று நடக்க வேண்டும் என அறிவுறுத்தினா்.