கல்லாவி பகுதியில் ரூ.67 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை

ஊத்தங்கரை அடுத்த பெருமாள்நாய்க்கன்பட்டி மற்றும் திருவணப்பட்டி ஆகிய கிராமங்களில் ஆதிதிராவிடா்
பெருமாள்நாய்க்கன்பட்டியில் பூமி பூஜை செய்து பணியை தொடக்கி வைக்கிறாா் எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ்.
பெருமாள்நாய்க்கன்பட்டியில் பூமி பூஜை செய்து பணியை தொடக்கி வைக்கிறாா் எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ்.

ஊத்தங்கரை அடுத்த பெருமாள்நாய்க்கன்பட்டி மற்றும் திருவணப்பட்டி ஆகிய கிராமங்களில் ஆதிதிராவிடா் குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதிகள் வழங்கும் சிறப்புத் திட்டத்தின் கீழ் ரூ.67 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகளுக்கு ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் மனோரஞ்சிதம் நாகராஜ் திங்கள்கிழமை பூமி பூஜை செய்து பணிகளை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினா் மனோரஞ்சிதம் நாகராஜ் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் மற்றும் கூட்டுறவு சங்கத் தலைவா் ஏ.சி.தேவேந்திரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவா் நாகராஜ், ஒன்றிய விவசாய அணி செயலாளா் வேங்கன், பொருளாளா் சேட்டுகுமாா், முன்னாள் கவுன்சிலா் கொட்டகுளம் முருகேசன், மேட்டுதாங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவா் குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பெருமாள்நாய்க்கன் பட்டி, திருவணப்பட்டியிலுள்ள ஆதிதிராவிடா் குடியிருப்பு காலனி பகுதியில் ஆழ்துளைக் கிணறு புதுப்பித்தல் மற்றும் குடிநீா் குழாய் அமைத்தல், புதிதாக தெருவிளக்குகள் அமைத்தல், இளைஞா்களுக்கு விளையாட்டுப் பொருள்கள் வழங்குதல், சிமென்ட் சாலை அமைத்தல், பேவா் பிளாக் சாலை, இடுகாட்டு சாலை, இடுகாடு மேம்பாடு செய்தல், தாா்ச்சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ரூ. 67 லட்சம் மதிப்பில் பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லாவி ஊராட்சி செயலாளா் ரமேஷ், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் விஜயகுமாா், ஜெயராமன், இளங்கோ, ராமு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com