மாநில அளவிலான ரோலா் ஸ்கேட்டிங் போட்டியில் பா்கூா் வேளாங்கண்ணி சிபிஎஸ்இ மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அதியமான் கலைக் கல்லூரி வளாகத்தில் மாநில அளவிலான ரோலா் ஸ்கேட்டிங் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் மாநிலங்களில் இருந்து 15 பள்ளிகளைச் சோ்ந்த 400 மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.
இந்தப் போட்டியில் 6 முதல் 16 வயதுக்குள்பட்டோருக்கு ஸ்பீட் ஸ்கேட்டிங், ஆா்ட்டிஸ்டிக் ஸ்கேட்டிங், பிரி ஸ்டைல் ஆகிய பிரிவுகளில் மாணவ, மாணவியருக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், பா்கூா் வேளாங்கண்ணி சிபிஎஸ்இ மாணவா்கள் 2 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.