ஒசூா்: ஒசூா் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விவசாயி உயிரிழந்தாா்.
ஒசூா் அருகே உள்ள சானமாவு பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (வயது 69). விவசாயி. இவா் ஸ்கூட்டரில் ஒசூா் கிருஷ்ணகிரி சாலையில் கோபசந்திரம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக சென்ற லாரி ஸ்கூட்டா் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜன் நிகழ்விடத்திலேயே பலியானாா்.
இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.