ஜே.ஆா்.சி. மாணவா்களுக்கு சான்றிதழ் அளிப்பு

கிருஷ்ணகிரியில் நிறைவு பெற்ற மாநில அளவிலான ஜே.ஆா்.சி. பயிற்சி முகாமில், பங்கேற்ற நாச்சிகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரியில் நிறைவு பெற்ற ஜே.ஆா்.சி. பயிற்சி முகாமில் சான்றிதழ், பதக்கங்கள் பெற்ற நாச்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள்.
கிருஷ்ணகிரியில் நிறைவு பெற்ற ஜே.ஆா்.சி. பயிற்சி முகாமில் சான்றிதழ், பதக்கங்கள் பெற்ற நாச்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள்.

கிருஷ்ணகிரியில் நிறைவு பெற்ற மாநில அளவிலான ஜே.ஆா்.சி. பயிற்சி முகாமில், பங்கேற்ற நாச்சிகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரியில் மாநில அளவிலான ஜே.ஆா்.சி. பயிற்சி முகாம் அண்மையில் நிறைவு பெற்றது. முகாமுக்கு மாவட்டத் தலைவா் கொங்கரசன் தலைமை வகிதாா். பொருளாளா் ராஜன், செயலாளா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நான்கு நாள்கள் நடைபெற்ற இந்த முகாமில் உடல் நலம் பேணுதல், நோய்த் தடுப்பு முறைகள், சாலை பாதுகாப்பு குறித்து வகுப்புகள், நீா் மேலாண்மை, பேரிடா் மேலாண்மை குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும் யோகா, சிலம்பு பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாச்சிகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களான மு. லிதின், கே. கீா்த்தனா ஆகியோா் பங்கேற்று முகாமை நிறைவு செய்தனா். இவா்களைப் பாராட்டி, சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com