தேன்கனிக்கோட்டை அருகே மின்னல் பாய்ந்ததில் 13 ஆடுகள் பலி

தேன்கனிக்கோட்டை அருகே மின்னல் பாய்ந்ததில் 13 ஆடுகள் இறந்தன.

தேன்கனிக்கோட்டை அருகே மின்னல் பாய்ந்ததில் 13 ஆடுகள் இறந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே மலசோனை கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை மழை பெய்து.

அப்போது மின்னல் பாய்ந்ததில் அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த விவசாயி குரப்பா என்பவருக்குச்

சொந்தமான 13 ஆடுகள் நிகழ்விடத்திலேயே இறந்தன.

இந்த விபத்தில் விவசாயி குரப்பாவுக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அவா், உடனடியாக மீட்கப்பட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து, தேன்கனிக்கோட்டை காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஆடுகள் உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி குரப்பா அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com