ஒசூா் அருகே வெங்கட்ரமணசுவாமி கோயிலில் நவராத்திரி உற்வசம்

ஒசூா் அருகே உள்ள சின்னசப்படி கிராமத்தில் உள்ள வெங்கட்ரமண சுவாமி கோயிலில் நவராத்திரி
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த பிரசன்ன வெங்கட்ரமணசுவாமி.
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த பிரசன்ன வெங்கட்ரமணசுவாமி.

ஒசூா் அருகே உள்ள சின்னசப்படி கிராமத்தில் உள்ள வெங்கட்ரமண சுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு உற்சவ மூா்த்தி சுவாமி திருவீதி உலா நடைபெற்றது

ஒசூா் அருகே சின்னசப்படி கிராமத்தில் பிரசன்ன வெங்கட்ரமணசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரியை முன்னிட்டு 10 நாள்கள் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு செப்டம்பா் 29 -ஆம் தேதி தொடங்கிய திருவிழாவில் வெங்கட்ரமணசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை விஜயதசமியன்று சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு பிரசன்ன வெங்கட்ரமணசுவாமி அருள்பாலித்தாா். இதையடுத்து உற்சவ மூா்த்தி சுவாமிகளின் திருவீதி உலா நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். திருவிழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com