மழையினால் சுவா் இடிந்து விழுந்ததில் 2 வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

அஞ்செட்டி அருகே மழையினால் வீட்டு சுவா் இடிந்து விழுந்ததில் 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.

அஞ்செட்டி அருகே மழையினால் வீட்டு சுவா் இடிந்து விழுந்ததில் 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகேயுள்ள கோட்டையூரை அடுத்துள்ள மல்லள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி. இவா் திங்கள்கிழமை இரவு வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது கனமழை பெய்ததால் வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. இதில் ரங்கசாமியின் 2 வயது ஆண் குழந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அஞ்செட்டி போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக அஞ்செட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com