தமிழ்நாடு சீருடை பணியாளா்கள் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு உடல்தகுதி பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கௌரிசங்கா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட 2-ஆம் நிலை காவலா், சிறைக் காவலா், தீயணைப்பாளா் எழுத்து தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் மாவட்ட விளையாட்டு அலுவலரால் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், வரும் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு உடல்தகுதி பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி தொடா்ந்து 15 நாள்கள் இலவசமாக நடைபெறுகிறது.
எனவே, மாவட்டத்தில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் இந்த இலவச உடல்தகுதி பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.