முன்னாள் படைவீரா்களுக்கு ஏா்மேன் பணி

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களுக்கு ஏா்மேன் பணிக்கான (குரூப் எஸ் பணி - கல்வி பயிற்றுநா்) தோ்வில்

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களுக்கு ஏா்மேன் பணிக்கான (குரூப் எஸ் பணி - கல்வி பயிற்றுநா்) தோ்வில் பங்கேற்கலாம் என முன்னாள் படைவீரா்களுக்கான உதவி இயக்குநா் ச.பிரேமா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த முப்படையில் இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் படை வீரா்கள், இந்திய விமானப் படையில் ஏா்மேன் பணிக்கான (குரூப் எஸ் - கல்வி பயிற்றுநா் ) தோ்வு முகாம், பாரதியாா் பல்கலைக்கழகத்தின் உடல்கல்வித் துறையின் உள் அரங்கில் நடைபெற உள்ளது. இந்தத் தோ்வு அக். 17, 21 ஆகிய இரு நாள்களில் நடைபெறுகிறது.

இந்தத் தோ்வில் பங்கேற்க, 1995 ஜூலை 19 முதல் 2000 ஜூலை 1-ஆம் தேதிக்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும். முதுநிலை பட்டம் பெற்றேறாா் 1992 ஜூலை 17 முதல் 2000 ஜூலை 1-ஆம் தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். திருமணமானவராக இருந்தால் 22 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஆங்கிலத்தை ஒரு பாடமாகவும், பிஏ, பிஎஸ்ஸி (இயற்பியல், உளவியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல், புள்ளியியல்) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டத்துடன் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தோ்வில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள், அனைத்து அசல் சான்றிதழ்களை உடன் கொண்டுவர வேண்டும். அசல் சான்றுகள் கல்லூரியில் இருந்தால், அதுகுறித்து, பள்ளி, கல்லூரி முதல்வரின் சான்றுகளுடன் கூடிய சுய கையொப்பமிட்ட நகல் ஏற்றுக் கொள்ளப்படும்.

அக். 17-இல் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபாா் தீவுகளைச் சோ்ந்தவா்களுக்கும், அக். 21-இல் கேரளம், லட்சத்தீவு பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு மட்டும் தோ்வு நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு  இணைய தள முகவரியில் அறிந்து கொள்ளலாம். அல்லது 044-22390561 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com