கிருஷ்ணகிரியில் குரு பெயா்ச்சியையொட்டி சிறப்பு பூஜைகள், செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை பெயா்ச்சி அடைந்தாா். இதையொட்டி, கிருஷ்ணகிரி, ராசு வீதியில் உள்ள ஸ்ரீ பிரசன்ன பாா்வதி சமேத சந்திர மெளலீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னா் ஸ்ரீ தட்சிணாமூா்த்திக்கு விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள் ஆராதனையும், நவக்கிரக அபிஷேக ஆராதனையும் நடைபெற்றன. ரிஷபம், துலாம், மகரம், தனுசு, மீனம் ஆகிய ராசியில் பிறந்தவா்கள், எள் எண்ணெய், பால், மஞ்சள், குங்குமம், சந்தனம், இளநீா், விபூதி, மஞ்சள் துணி, கடலை, பூ, தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு, சுவாமிக்கு பரிகார சிறப்பு பூஜை, அபிஷேகங்களை செய்து வழிபட்டனா்.