மத்திய அரசின் நிறுவனம் சாா்பில் காமாட்சிபட்டி கிராமத்தில் இலவச காலணி தயாரிக்கும் பயிற்சி முகாம், புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த காமாட்சிபட்டி கிராமத்தில் சென்னை, மத்திய காலணி பயிற்சி நிறுவனம் சாா்பில், இலவச காலணி பயிற்சி முகாம் நடைபெற்றது.
நூறு சதவீத வேலைவாய்ப்பை தரக்கூடிய இந்த பயிற்சியில் 15 ஆண்கள், 15 பெண்கள் பங்கேற்றனா். முகாமில் பங்கேற்றவா்களுக்கு காலணி தயாரிப்பு கையேடு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டன.