கிருஷ்ணகிரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், நவம்பா் 1-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கெளரிசங்கா், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி நவம்பா் 1-ஆம் தேதி காலை 10 மணியளவில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், கிருஷ்ணகிரி, ஒசூரைச் சோ்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான ஆள்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.
இதில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ படித்தவா்கள் பங்கேற்கலாம். 18 வயது முதல் 35 வயது வரையில் உள்ள இருபாலரும் பங்கேற்கலாம்.
இந்தத் தகுதியுடைய பணிநாடுநா்கள், தங்களது சுய விவரம் மற்றும் அனைத்து கல்வி சான்றிதழ் நகலுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
முகாமில் பங்கேற்பதால், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.