தேன்கனிக்கோட்டை அருகே மணல் கடத்திச் சென்ற டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தேன்கனிக்கோட்டை உதவி காவல் ஆய்வாளா் நாகராஜ் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அவா்கள் தேன்கனிக்கோட்டை கெலமங்கலம் சாலையில் தனியாா் நிறுவனம் அருகில் சென்ற போது கேட்பாரற்று ஒரு டிராக்டா் இருந்தது. அதை சோதனை செய்த போது அதில் ஒரு யூனிட் மணல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.