பாரதியார் நினைவு தினம்

பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா பேரவையின் சார்பில், மகாகவி பாரதியாரின் 98-ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா பேரவையின் சார்பில், மகாகவி பாரதியாரின் 98-ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
 இதற்கு தியாகி சுப்பிரமணிய சிவா பேரவையின் அமைப்பாளர் வே.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். இதில், மகாகவி பாரதியாரின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், பாரதியாரின் கவித்திறன் பற்றியும், விடுதலைப் போராட்டத்தின் பங்கு, சமூக பணி உள்ளிட்டவைகளை பற்றியும் விளக்கிப் பேசினர்.
 இந்த நிகழ்ச்சியில், பேரவை நிர்வாகிகள் சமதர்மம், டி.தங்கராஜ், தியாகி சுப்பிரமணிய சிவா தொழிலாளர் சங்கத் தலைவர் முருகேசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் சிலம்பரசன், மணிகண்டன், பேரவை நிர்வாகிகள் சக்திவேல், இளங்கோ, வேட்ராயன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com