ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத  3 சடலங்கள் மீட்பு

ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 3 சடலங்கள் மீட்கப்பட்டன.

ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத 3 சடலங்கள் மீட்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள்பட்ட  ஊத்தங்கரையை அடுத்த இராமகிருஷ்ணம்பதியில் ரயில்வே தண்டவாளம் அருகே அடையாளம் தெரியாத சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம்,  22 வயது மதிக்கத்தக்க பெண் சடலம், அடிபட்ட நிலையில் பச்சிளம் பெண் குழந்தை சடலமும் புதன்கிழமை கிடந்தன.
தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு வந்த சேலம் ரயில்வே போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், சடலத்தின் அருகே கிடந்த செல்லிடப்பேசியை வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
விசாரணைக்கு பிறகே அவர்கள் யார் என்பது தெரியவரும். இவர்கள் கொலை செய்யப்பட்டனரா, தற்கொலை செய்துகொண்டனரா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com