வீட்டுவசதி வாரிய வீடுகளுக்கான குலுக்கல் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடு வீட்டுவசதி வாரியம், ஒசூர் வீட்டுவசதி பிரிவு தருமபுரி மாவட்டத்தில் உள்ள எ.ஜெட்டிஅள்ளி புறநகர் திட்டத்தில், சுயநிதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 30 குறைந்த வருவாய் பிரிவு தனி வீடுகளுக்கு 12.9.19-இல் குலுக்கல் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், நிர்வாக காரணங்களால் குலுக்கல் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பின்னர் தேதி அறிவிக்கப்படும் என ஒசூர் கோட்ட செயற்பொறியாளர் எட்வின் சுந்தர்சிங் தெரிவித்துள்ளார்.