ஒசூரில் வீட்டின் கதவை உடைத்து 67 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஒசூர் முனீஸ்வரன் நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கிறிஸ்டோபர். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் ஒசூரில் உள்ள கடை தெருவுக்கு வெள்ளிக்கிழமை மாலை சென்றிருந்த போது அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவிலிருந்த 67 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.
வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது நகைகள் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்த கிறிஸ்டோபர், ஒசூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.