விமானப் படையில் ஆசிரியர் பணிக்கு ஆள் சேர்ப்பு முகாம்

கோவையில் அக்.17 முதல் 25 ஆம் தேதி வரை விமான படையில் ஆசிரியர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.


கோவையில் அக்.17 முதல் 25 ஆம் தேதி வரை விமான படையில் ஆசிரியர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்த கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரிசங்கர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய விமானப் படையில் ஆசிரியர் பணிக்கான ஆள்சேர்ப்பு முகாம் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கில் அக்டோபர் 17 முதல் 25-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.  இப் பணிக்கு இளநிலைப் பட்டத்துடன் பி.எட். முடித்திருக்க வேண்டும்.
19.1.1995 முதல் 1.7.2000 தேதிக்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும். இளநிலைப் பட்டப்படிப்பு ஆங்கிலம் அல்லது இளநிலை அறிவியல் பட்டப் படிப்புகளான இயற்பியல், உளவியல், வேதியியல், கணிதம், தகவல் தொடர்பியல், கணினி அறிவியல், புள்ளியியல் அல்லது பி.சி.ஏ. பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 
பி.எட் பட்டப்படிப்பு படித்தவர்கள் 19.7.1992  முதல் 1.7.2000 ஆகிய தேதிக்குள் பிறந்தவர்களாகவும், முதுநிலை ஆங்கிலம், உளவியல் அல்லது முதுநிலை கணிதம், இயற்பியல், புள்ளியியல், கணினி அறிவியல், தகவல் தொடர்பியல் அல்லது எம்.சி.ஏ. ஆகிய கல்வித் தகுதியுடன் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 
மேலும் விவரங்களுக்கு   இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதுதொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி செப்.28-ஆம் தேதி காலை 10 மணிக்கு கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுவதால், இந்த நிகழ்ச்சியில் தகுதியுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com