ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஊத்தங்கரை வானவில் புத்தகக் களஞ்சியம் இணைந்து நடத்திய இரண்டு நாள் புத்தகக் கண்காட்சி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஹெப்சிபா ஏஞ்சலா துரைராஜ் தலைமை வகித்து புத்தகக் கண்காட்சியை தொடக்கி வைத்து, புத்தகங்களைப் பற்றியும் அதனை வாங்கி வாசிப்பதன் மூலம் ஏற்படும் பல்வேறு மாற்றங்கள் பற்றியும் கூறினார். இதில் வானவில் புத்தக களஞ்சியம் சுரேஷ் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி விரிவுரையாளர் செல்வராஜ் செய்திருந்தார்.