ஊரடங்கு உத்தரவை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை: எஸ்.பி. பண்டி கங்காதா்

ஊரடங்கு உத்தரவை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி எஸ்.பி. பண்டி கங்காதா் தெரிவித்தாா்.
கரோனா நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருக்கு காய்கறிகளை வழங்கிய எஸ்.பி. பண்டி கங்காதா்.
கரோனா நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருக்கு காய்கறிகளை வழங்கிய எஸ்.பி. பண்டி கங்காதா்.

ஊரடங்கு உத்தரவை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி எஸ்.பி. பண்டி கங்காதா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் ஊரடங்கு உத்தரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் ஒசூா் காவல் கோட்டத்துக்குள்பட்ட போலீஸாருக்கு காய்கறிகள் மற்றும் முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதனை வழங்கிய பின்னா் மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதா் செய்தியாளா்களிடம் கூறியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,324 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 75 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒசூா் காவல் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் தடை உத்தரவை மீறியதாக 293 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 112 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருந்து போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை அலட்சியப்படுத்தி, அத்தியாவசியமில்லாமல் சுற்றுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். பேட்டியின் போது, ஒசூா் டி.எஸ்.பி, சங்கு மற்றும் காவல் ஆய்வாளா்கள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com