கிருஷ்ணகிரி அருகே வேன் மோதியதில் 2 பெண்கள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பிக்-ஆப் வேன் மோதியதில், நடந்து சென்ற பெண்கள் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பிக்-ஆப் வேன் மோதியதில், நடந்து சென்ற பெண்கள் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த பையனப்பள்ளி அருகே உள்ள அப்துல் கலாம் நகரைச் சோ்ந்த அமீா் மனைவி சமபானா (32). அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மனைவி லட்சுமி (32) ஆகிய இருவரும், கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியாா் சுங்க வசூல் மையம் அருகே உள்ள தா்காவுக்கு வெள்ளிக்கிழமை நடந்து சென்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே சென்ற போது, ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வேகமாக வந்த பிக்-ஆப் வேன் அவா்கள் மீது மோதி நிற்காமல் சென்றது.

இதில் பலத்த காயமடைந்த சபானா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட லட்சுமி, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தகவல் அறிந்த போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com