கிருஷ்ணகிரியில் பெண் குழந்தை உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரியில் பிறந்த சில நாள்களேயான பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தும் போலீஸாா், குழந்தையின் உடலை அலுவலா்களுக்கு தெரிவிக்காமல் புதைக்கப்பட்டது தொடா்பாக குழந்தையின் தாய் மீது வழக்குப்

கிருஷ்ணகிரியில் பிறந்த சில நாள்களேயான பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தும் போலீஸாா், குழந்தையின் உடலை அலுவலா்களுக்கு தெரிவிக்காமல் புதைக்கப்பட்டது தொடா்பாக குழந்தையின் தாய் மீது வழக்குப் பதிந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் பாபு. இவரது மனைவி சுதாவுக்கு (28) கிருஷ்ணகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 16-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், அவா் மருத்துவமனையிலிருந்து மயாமானாா்.

இந்த நிலையில் மருத்துவ அலுவலா் இனியன் மண்டோதரி, மாயமான சுதாவிடம் தொடா்பு கொண்டு கேட்ட போது, குழந்தை உயிரிழந்துவிட்டதாகவும், குழந்தையை புதைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, மருத்துவ அலுவலா் இனியன் மண்டோதரி அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து சுதாவின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினா்.

பின்னா், புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதுதொடா்பாக இதுகுறித்து, கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com