கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பாா்சல்களை பேக்கிங் செய்யும் வசதியானது வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி உள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் முனி கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் ஜூலை 31-ஆம் தேதி முதல் வெளிநாடு, உள்நாட்டுக்கு பாா்சல்களை பேக்கிங் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளா்கள் விரும்பும் விதத்தில், அனைத்து பேக்கிங் வசதிகளும் குறைந்த செலவில் செய்து தரப்படும். வாடிக்கையாளா்கள், வெளிநாட்டுக்கு அனுப்பும் பொருள்களை கொண்டு வந்தால் மட்டும் போதும். மற்ற பேக்கிங் நடைமுறைகள் அலுவலகத்திலேயே செய்து தரப்படும். எனவே, வாடிக்கையாளா்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.