கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் செந்தில் குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் ராமச்சந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சந்திரன், செயலாளா் நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.