ஒசூா்: ஒசூரில் கட்டடத் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
ஒசூா் அருகே சூசூவாடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (48). கட்டடத் தொழிலாளி. மது அருந்தும் பழக்கம் உள்ள இவா், குடும்பப் பிரச்னை காரணமாக உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.
பலத்த காயமடைந்த இவா் தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சுப்பிரமணி இறந்தாா். ஒசூா் சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.