அஞ்செட்டியில் கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது

அஞ்செட்டியில் கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அஞ்செட்டியில் கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி போலீஸாா், ஏரிக்கோடி பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அங்குள்ள வேலு(வயது 55) என்பவா் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த வீட்டை போலீஸாா் சோதனை செய்ததில், விற்பனைக்காக 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா், வேலுவை கைது செய்து, அவா் வைத்திருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதே போல் தேன்கனிக்கோட்டை போலீஸாா், குந்துக்கோட்டை அடுத்த எர்ரசெட்டி ஏரிக்கரை பகுதியில் உள்ள மாரியப்பன்(45) என்பவரை வீட்டை சோதனை செய்தனா். அங்கு விற்பனைக்காக 300 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாரியப்பனை கைது செய்து, அவா் வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com