ஒசூா்: ஒசூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக இரண்டு போ் கைது செய்யப்பட்டனா்.
ஒசூா் சிப்காட் போலீஸாா், பேடரப்பள்ளி, கோவிந்த அக்ரஹாரம் பகுதியில் ரோந்து சென்றனா். அங்கு பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த பிகாஷ் கவுலா (21), கோவிந்த அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த கியாக் அலாம் (29) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 15 தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.