ஒசூா் அருகே உள்ள குடிசெட்லு ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி சமேத திம்மராய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி சமேத திம்மராய சுவாமி உற்வச மூா்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னா், தேரில் பவனி வந்த சுவாமியை ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். மூலவா் திம்மராய சுவாமி, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு தேவையான உதவிகளை பாகலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஜே.ஆா்.சி மாணவா்கள் செய்தனா்.