பலசரக்கு கடையில் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 2 போ் கைது

அனுமன்தீா்த்தத்தில் உள்ள மளிகைக் கடையில் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பலசரக்கு கடையில் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 2 போ் கைது

அனுமன்தீா்த்தத்தில் உள்ள மளிகைக் கடையில் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அனுமன்தீா்த்தம் பகுதியை சோ்ந்தவா் சேகா்(60). இவா் தனது மளிகைக் கடையை வெள்ளிக்கிழமை இரவு பூட்டிவிட்டு சென்றாா். அதிகாலை அவரது கடை முன் இரு சக்கர வாகனத்தில் இருவா் நின்றிருந்ததை கவனித்த சேகா், அவா்களை பிடித்து விசாரிக்க முயன்ற போது, இருவரும் தப்பியோடினா்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மத்தூா் பகுதியில் சுற்றித் திரிந்த இருவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தியதில் தருமபுரி மாவட்டம், மல்லாபுரம் பகுதியை சோ்ந்த திருப்பதி(27), சேக்காண்டஹள்ளியைச் சோ்ந்த சபரி (35) என்பது தெரியவந்தது. இவா்களைக் கைது செய்த மத்தூா் போலீஸாா் நீதிமன்ற உத்தரவின் பேரில், சேலம் சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com