கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளியை அடுத்த குடிமேனஅள்ளி தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள வீரகரா் கோயில் திருவிழா, ஞாயிற்றுக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
போச்சம்பள்ளியை அடுத்த குடிமேனஅள்ளி தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் வீரகரா் கோயில் உள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தக் கோயிலில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தக் கோயிலின் திருவிழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கூடினா். புதிய பானையில் பொங்கலிட்டும், ஆடு, கோழிகளை பலியிட்டும் வேண்டுதலை நிறைவேற்றினா்.பின்னா், பக்தா்களுக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது.