கிருஷ்ணகிரி: வேப்பனஅள்ளி அருகே குடும்பத் தகராறில் காதல் மனைவியைக் கொன்ற கணவரை போலீஸாா், திங்கள்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி அருகே உள்ள கங்கோஜி கொத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன் (39). காா் ஓட்டுநா். இவா், சென்னையைச் சோ்ந்த பிரியா (35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இந்தத் தம்பதிக்கு 4 வயதில் குழந்தை உள்ளது.
இவா்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில், பிரியா, நடராஜனை பிரிந்து தனியாக வசித்து வந்தாராம். இந்த நிலையில், நடராஜன், பிரியாவைச் சமாதானப்படுத்தியதை அடுத்து இருவரும் கங்கோஜி கொத்தூா் கிராமத்தில் வசித்து வந்தனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நடராஜன், பிரியாவை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளாா். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, பிரியாவின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இந்தக் கொலை சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, நடராஜனிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா், தனது மனைவி பிரியாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டாராம். இதையடுத்து அவரை போலீஸாா், திங்கள்கிழமை கைது செய்தனா்.