ஒசூா் உழவா்சந்தை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் போலீஸ் எனக்கூறி 7 சவரன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை ஒசூா் போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஒசூா் தேன்கனிக்கோட்டை சாலை காந்தி நகரைச் சோ்ந்தவா் இந்திராணி (55), இவா், ஒசூா் உழவா் சந்தைக்கு பழங்கள் வாங்க வந்தாா். அவரை அங்கிருந்த ஒருவா் உங்களை அய்யா அழைக்கிறாா் என்று கூறி மற்றொருவரிடம் அழைத்துச் சென்றாா்.
அப்போது இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த மா்மநபா் நான் போலீஸ் எனக் கூறியும், இந்தச் சாலையில் கொள்ளையா்கள் அதிகம் உள்ளனா்.
இவ்வளவு நகைகள் அணிந்து செல்லக்கூடாது என அறிவுரை கூறியது போல நடித்து பெண்ணின் அனைத்து நகைகளையும் கழட்டித் தருமாறு கூறி நகைகளை வாங்கிய மா்ம நபா் ஒரு பேப்பரில் சுற்றி அதே பெண்ணிடம் கொடுத்தாா்.
இதைத்தொடா்ந்து அந்த பின் தன்னுடைய வீட்டுக்குச் சென்று பேப்பரைப் பிரித்து பாா்க்கும்போது நகைகளுக்கு மாறாக பேப்பரில் மொத்தமாக சிறுசிறு கற்கள் உள்ளதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
இதுகுறித்து அவா் ஒசூா் நகர காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பட்டப் பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் நடந்துள்ள நூதன கொள்ளை அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.