போச்சம்பள்ளியை அடுத்த பண்ணந்தூா் பி.டி. பலராம்சிங் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் பிரபா தலைமை வகித்தாா்.
பண்ணந்தூா் துணை ஊராட்சி மன்றத் தலைவா் சங்கீதா சக்திவேல், கவுன்சிலா் திருப்பதி, பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் யுவராசு, பிரகாஷ், வினேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
உதவி தலைமை ஆசிரியா் பெருமாள் வரவேற்றாா், இதில் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை பண்ணந்தூா் ஊராட்சி மன்ற தலைவா் இளங்கோ வழங்கினாா்.
இதில் ஆசிரியா்கள் பாா்த்திபன், மாதன், சிலம்பு, உமாதேவி, ஜெயந்தி மற்றும் மாணவா்கள் பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள், பெற்றோா் கலந்து கொண்டனா்.