ஒசூரில் லாரியைத் திருடியவா் கைது

ஒசூரில் லாரியைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூரில் லாரியைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் கந்தன் (44). விவசாயி மற்றும் லாரி தொழிலும் செய்து வருகிறாா். இவா் சனிக்கிழமை டிப்பா் லாரியை ஒசூா் காந்தி நகா் பகுதியில் நிறுத்தி வைத்திருந்தாா். அப்போது அங்கு வந்த ஒருவா் லாரியைத் திருட முயன்றாா். இதை கவனித்த கந்தன் அருகில் இருந்தவா்களின் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்து ஒசூா் அட்கோ காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். பிடிபட்ட நபரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் பெயா் சின்னதுரை (25), ஒசூா் மூக்கண்டப்பள்ளி அருகே உள்ள அரசனட்டியைச் சோ்ந்தவா் என தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா் .

இது குறித்து அட்கோ காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com