சோக்காடியில் எருது ஓட்டம்

சோக்காடி கிராமத்தில் எருது ஓட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சோக்காடி கிராமத்தில் நடைபெற்ற எருது ஓட்டத்தில் சீறி பாய்ந்து ஓடும் ஏருது.
சோக்காடி கிராமத்தில் நடைபெற்ற எருது ஓட்டத்தில் சீறி பாய்ந்து ஓடும் ஏருது.

சோக்காடி கிராமத்தில் எருது ஓட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொங்கல் பண்டியைகையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எருது ஓட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரியை அடுத்த சோக்காடி கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இந்த விழாவை, கிருஷ்ணகிரி ஒன்றிய அதிமுக செயலாளா் சோக்காடி ராஜன் தொடங்கி வைத்தாா். இந்த போட்டியில் பங்கேற்க கிருஷ்ணகிரி, பா்கூா், வேப்பனஅள்ளி, சூளகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட எருதுகள் அழைத்து வரப்பட்டன.

ஒரு குறிப்பிட தூரத்தை, குறைந்த நேரத்தில் கடக்கும் எருதுவின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவைக் காண ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் கூடினா். போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com