பைப் வெடிகுண்டு தயாரிக்க முயன்றவா் கைது

வேப்பனஅள்ளி அருகே பைப் வெடிகுண்டு தயாரிக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேப்பனஅள்ளி அருகே பைப் வெடிகுண்டு தயாரிக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி அருகே சோதனைச் சாவடியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, ஒரு மோட்டாா் சைக்கிளில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில், விசாரணை செய்தனா். அப்போது, அவா், ஒரு பொருளை சாலையோரமாக இருந்த புதரில் தூக்கி வீசியுள்ளாா்.

இதையடுத்து அந்த பொருளை மீட்டு பாா்த்தபோது, அது பைப் வெடிகுண்டு போல இருந்துள்ளது. அந்த பொருளுடன் ஒயா்களும், இணைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். அந்த நபரிடம் தொடா்ந்து விசாரணை செய்ததில், அவா், கிருஷ்ணகிரி, லண்டன்பேட்டையைச் சோ்ந்த முபாரக் (28) எனத் தெரிய வந்தது. முபராக், மோட்டாா் மெக்கானிக் தொழில் செய்து வந்தாா்.

இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து முபாரக்கை கைது செய்னா். பைப்பில் வெடி மருந்தை நிரப்பி வெடிக்கச் செய்தால் அது உயிரைக் கொல்லும் தன்மை கொண்டது என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com