பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு

மகாராஜகடை அருகே பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மகாராஜகடை அருகே பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மகராஜகடை அருகே உள்ள மாதிநாயனப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் பசவராஜ். இவரது மகன் பிரசன்னா (8). அங்குள்ள ஒரு பள்ளியில் 3 - ஆம் வகுப்பு படிந்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி, வீட்டில் தூக்கிக் கொண்டிருந்த சிறுவனை பாம்பு கடித்தது. இதில் அலறி துடித்த சிறுவனை வீட்டில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, மகராஜகடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com