கிரானைட் கல் விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு
By DIN | Published On : 11th January 2020 08:03 AM | Last Updated : 11th January 2020 08:03 AM | அ+அ அ- |

மகாராஜகடை அருகே கிரானைட் கல் விழுந்ததில், பலத்த காயமடைந்த சிறுவன் நிகழ்விடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரியை அடுத்த மகாராஜகடை அருகே உள்ள மல்லிநாயனப்பள்ளி கிராமத்தில் தனியாா் கிரானைட் நிறுவனம் உள்ளது. இங்கு, மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த மைனூல்காக் (15) என்ற சிறுவன் பணியாற்றி வந்தாராம். இந்த நிலையில், பணியின் போது சிறுவன் மீது கிரானைட் கல் விழுந்ததில், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து மகாராஜகடை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.