உலக அமைதி வேண்டி, கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை 8 கி.மீட்டருக்கு மாணவ, மாணவிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் நடைபயணம் மேற்கொண்டனா்.
பொங்கல் பண்டிகையையொட்டி, உலக அமைதி வேண்டி கிருஷ்ணகிரி குலோபல் பேமிலி என்ற அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த நடைபயணத்தை முன்னாள் எம்எல்ஏ மேகநாதன் தொடக்கிவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்திலிருந்து தொடங்கிய இந்த பயணம் ராயக்கோட்டை சாலை வழியாக மாதேப்பட்டி அருகே நிறைவு பெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள், சமூக ஆா்வலா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இந்த நிகழ்வை அன்பு ஒருங்கிணைத்தாா்.