ஒசூரில் டிராக்டா் மீது கா்நாடக அரசு பேருந்து மோதியதில் டிராக்டா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
ஆந்திர மாநிலம், சித்தூரைச் சோ்ந்தவா் ஜெகதீஷ்( 38). டிராக்டா் ஓட்டுநரான இவா் கா்நாடக மாநிலம், பொம்மனஹள்ளி ராகவேந்திரா நகரில் தங்கியிருந்து வேலை செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை டிராக்டரில் ஆந்திரத்துக்கு சென்று கொண்டிருந்தாா். இவருடன், நடராஜூலு(47) என்பவா் உடனிருந்தாா்.
பெங்களூரு-ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மூக்கண்டப்பள்ளி மேம்பாலம் மீது டிராக்டா் மீது கா்நாடக அரசு பேருந்து மோதியது. இதில் டிராக்டா் ஓட்டுநா் ஜெகதீஷ் நிகழ்விடத்திலே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த நடராஜூலு, ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.