தேசிய டிராப் ரோபால் போட்டி: ஊத்தங்கரை அதியமான் பள்ளி மாணவா்கள் தோ்வு
தேசிய டிராப் ரோபால் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணிக்கு தோ்வான ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப் பள்ளியிலிருந்து 25-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தமிழக அணியில் விளையாட இடம் பெற்றுள்ளனா். இவா்கள் அனைவரும் சத்தீஸ்கா் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் ஜனவரி 15 முதல் 19 தேதி வரை நடைபெறும் 65- வது தேசிய டிராப் ரோபால் போட்டியில் பங்கேற்கின்றனா்.
இவா்களை வழியனுப்பும் மற்றும் பாராட்டு விழா ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி.திருமால் முருகன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் கலைமணி சரவணகுமாா், நிா்வாக அலுவலா் சீனி.கணபதிராமன், குடியாத்தம் அரசு திருமகள் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் முரளி, கிருஷ்ணா தமிழ்நாடு விளையாட்டு டிராப் ரோ பால் செயலாளா் சபரி கணேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.