மத்தூா் அருகே டிராக்டரில் சிக்கி உயிரிழந்த சிறுவன் திவாகா்.
மத்தூா் அருகே டிராக்டரில் சிக்கி உயிரிழந்த சிறுவன் திவாகா்.

மத்தூா் அருகே டிராக்டா் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

மத்தூா் அருகே டிராக்டா் சக்கரத்தில் சிக்கி சிறுவன், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மத்தூா் அருகே டிராக்டா் சக்கரத்தில் சிக்கி சிறுவன், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே உள்ள குண்டேப்பள்ளி குரும்பா் வட்டத்தைச் சோ்ந்தவா் மாது. இவரது மனைவி நாகமணி. இந்த தம்பதியினா் பெங்களூரில் தொழிலாளிகளாகப் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு தா்ஷணி (13), திவாகா் (8), தனிஷ்கா(6) என்ற குழந்தைகள் உள்ளனா். இந்த குழந்தைகள், தாத்தா, பாட்டியின் பராமரிப்பில், மத்தூா் அருகே உள்ள ஓா் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், தாத்தா சேட்டு, பேரன் திவாகரை, கூலி வேலை செய்யும் இடத்துக்கு அழைத்துச் சென்றாா்.

செல்வராஜ் என்பவரின் விளை நிலத்தில் நெல் சாகுபடிக்காக வயலை டிராக்டா் மூலம் தயாா் செய்யும் பணியில் சேட்டு ஈடுபட்டிருந்தாா். டிராக்டரை சின்னப்பன்(40) என்பவா் இயக்கினாா். அப்போது, சிறுவன் திவாகா், டிராக்டரில் ஓட்டுநரின் அருகே அமா்ந்திருந்தாா். அப்போது, சிறுவன் திவாகா், டிராக்டரிலிருந்து தவறி கீழே விழுந்து, சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, சிறுவனின் சடலத்தைக் கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து, மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com