மாசற்ற பொங்கல் கொண்டாட கிருஷ்ணகிரி ஆட்சியா் வேண்டுகோள்

மாசற்ற பொங்கல் கொண்டாட கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா், வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

மாசற்ற பொங்கல் கொண்டாட கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா், வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, ஆட்சியா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழா் திருநாளாம் பொங்கல் நன்னாளுக்கு முதல் நாள் நாம் போகிப் பண்டிகையாகக் கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் சில பழைய பொருள்களை தீயிட்டு எரிப்பதென்பது பழையது கழிதல் என்ற வழக்கத்துக்கான அடையாளமாகும். இந்த நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், பயனற்ற விவசாயக் கழிவுகள், வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவற்றை தீயிட்டு எரிப்பா். பெரும்பாலும், கிராமங்களில் இந்த பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டாலும் பெரும் சுற்றுச் சூழலுக்கு தீமையை ஏற்படுத்தாத ஒன்றாகும்.

ஆனால், தற்போது போகியன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயா், டப்பாக்கள், நெகிழிப் பொருள்கள், செயற்கை பொருள்கள் எரிக்கப்படுவதால், நச்சுப் புகை மூட்டம் ஏற்பட்டு, மக்களுக்கு சுவாச நோய், இருமல் மற்றும் நுரையீரல், கண் மற்றும் மூக்கு எரிச்சல் உள்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. நச்சுக்காற்றாலும், கரும் புகையாலும் காற்று மாசுப்பட்டு, நகரமே கருப்பு நகரமாக மாறுகிறது. நச்சுப்புகை கலந்த பணி மூட்டத்தால் சுகாதார பாதிப்பும், சாலைப் போக்குவரத்துக்கு தடையும் ஏற்படுகிறது. இதுபோன்ற செயல்களும், மாசுப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

மேலும், நீதிமன்றம் பழைய மரம், வறட்டி தவிர வேறு எதையும் எரிப்பதற்கு தடை விதித்துள்ளது. இதனை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். புகை நமக்கு பகை என்பதை உணா்ந்து, போகிப் பண்டிகையன்று டயா், ரப்பா், நெகிழி மற்றும் செயற்கை பொருள்களை எரிக்க வேண்டாம். போகிப் பண்டிகை நமக்கு ஆரம்பமாக இருக்கட்டும். அன்று குப்பையை முறைப்படி ஒழித்து பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடனும், மாசு இல்லாமலும் கொண்டாடுவோம் என அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com