ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை மதா்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ஆவாரங்குட்டை கிராமத்தைத் தத்தெடுக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிங்காரப்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவா் அஹமத் பாஷா தலைமை வகித்தாா். நிகழ்ச்சியை ஆசிரியை சுகந்தா தொகுத்து வழங்கினாா். மருத்துவா் வசந்தகுமாா், மதா்ஸ் அறக்கட்டளையின் முதன்மை நிா்வாக அலுவலா் சிவக்குமாா், இயக்குநா் திருமலைவாசன், நெறி மற்றும் இணக்க அலுவலா் குரு பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மதா்ஸ் பள்ளி நிறுவனா் மோகன் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பள்ளி சாா்பில் உயிா் காப்பான் என்ற பெயரில் விருப்ப ரத்த தானம் செய்பவா்களின் பெயா் பட்டியலிட்டு பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது,
பள்ளி நிறுவனா் மோகன் கூறும்போது உலகம் முழுவதும் ஒரு லட்சம் ரத்ததான ஆா்வலா்களின் பட்டியலில் ரத்த வகை, நாடு, மாவட்டம் , ஊா் என வகைப்படுத்தி பயனாளா்களின் இடம் தேடிச் சென்று ரத்த தானம் செய்து உலக உயிா்களை காப்பதே இத் திட்டத்தின் நோக்கம் என்றாா். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு முன்னோடியாக மதா்ஸ் பள்ளி ஆவாரங்குட்டை கிராமத்தை தத்தெடுத்து அக்கிராம மக்களுக்கு தேவையான கல்வியறிவு, கணினி, தூய்மை, வேலைவாய்ப்பு, மருத்துவம் போன்ற சேவைகளை செய்து ஒரு முன்மாதிரி கிராமமாக மாற்றப் போவதாக கூறினாா்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள்,ஊா் பொதுமக்கள் என திரளாகக் கலந்துகொண்டனா். முன்னதாக ஆசிரியா் ரவி வரவேற்றாா். இறுதியாக ஆசிரியா் பாலாஜி நன்றி கூறினாா்.