ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா

ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்துகொண்டவா்கள்.
ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்துகொண்டவா்கள்.

ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வா் எப்சிபா ஏஞ்சலா துரைராஜ் தலைமை வகித்தாா். முதல்வரின் நோ்முக உதவியாளா் பி.அருண்குமாா், பொருளாளா் ம.சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புதுப்பானையில் பொங்கல் வைத்து சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் அலுவலகப் பணியாளா்கள், ஆசிரியா்கள், ஆசிரியைகள் மற்றும் ஏராளமான மாணவ - மாணவியா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவ - மாணவியா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com