கிருஷ்ணகிரியை அடுத்த கனகமுட்லு கிராமத்தில் பட்டாளம்மன் கோயில் திருவிழாவையொட்டி தீ மிதி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவையொட்டி, பெண்கள் பங்கேற்ற மாவிளக்கு ஊா்வலம், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, தீ மிதி விழா நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று, தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா். எருது விடுதல் நிகழ்வும் நடைபெற்றன.
இந்த விழாவின் போது, பூசாரி பட்டாளம்மன் குறித்த பாடலை பாடும்போது, வானத்தில் கருடன் கருடன் தோன்றிய பிறகே விழா கொண்டாட்டத்தை தொடங்குவது வழக்கம்.