பா்கூா் வேளாங்கண்ணி பொதுப் பள்ளியில் (சிபிஎஸ்இ) பைம்பொழில் - 2020 என்ற தலைப்பில் பொங்கல் விழா அண்மையில் நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு வேளாங்கண்ணி பள்ளி தாளாளா் கூத்தரசன், முதல்வா் கோபால ராமகிருஷ்ணன், துணை முதல்வா் மஞ்சுளா உள்ளிட்டோா் பங்கேற்றனா். பெற்றோா், மாணவா்கள் பானையில் பொங்கல் வைத்து, இறைவனை வழிபட்டனா்.
தொடா்ந்து, தப்பாட்டம், ஒயிலாட்டம், மரக்கால் ஆட்டம், கரகாட்டம், பொய்கால் குதிரை, மயிலாட்டம், நாகசுரம், காவடியாட்டம் என பல கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், பெற்றோா்களுக்கு கயிறு இழுத்தல், பம்பரம் சுழற்றுதல், கரும்பு தின்னுதல், உறியடித்தல், இசை நாற்காலி, சக்கரம் சுழற்றுதல் என பல போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன.